Monday, December 13, 2010

தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரம் என்ற தகவலில் உண்மையில்லை ஆளும் தரப்பு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

இலங்கையின் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரம் பாடப்படவேண்டும் என அமைச்சரவை யோசனை முன்வைக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள்,

விநாயகமூர்த்தி முரளீதரன் - பிரதியமைச்சர் (மீள்குடியேற்றம்)

வெளிநாடுகளைப் பொறுத்தவரையில் தேசிய கீதமானது ஒரு மொழியிலேயே பாடப்படுகிறது. ஆனால் இலங்கை அரசியல் அமைப்பின் படி இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் பாடும் முறை உள்ளது.
இந்நிலையில் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தீர்மானமானது நம்பகத் தன்மையற்றதாகும்.

பி.திகாம்பரம் - நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

இலங்கையின் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரம் பாடப்படும் என்ற தகவல் உண்மையற்றது. அவ்வாறானதொரு தீர்மானம் எடுக்கப்படுமாயின் எமது எதிர்ப்பை நாம் வெளியிடுவோம்.

No comments:

Post a Comment