Sunday, December 12, 2010

வாகன விபத்தில் மாணவன் பலி.

புசல்லாவ சரஸ்வதி மகாவித்தியாலய மணவன் ஒருவன் வாகன விபத்தில் ஸ்தலத்தில் பலியான சம்பவம் ஒன்று நேற்று இடம் பெற்றுள்ளது.
புசல்லாவ சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் ஆறாம் வகுப்பில் கல்வி பயிலும் மணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நுவரெலியா-கம்பளை பிரதான வீதியில் புசல்லாவ சரஸ்வதி வித்தியாலயத்திற்கு அருகில் வைத்து கொத்மலை நோக்கிப் பயணித்த லொரியொன்றுடன் மோதுண்ட போதே மாணவன் பலியாகியுள்ளான்.
சடலம் தற்போது புசல்லாவ வஹ-கபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment