Tuesday, November 16, 2010

இந்தியாவின் கிழக்கு டில்லியில் குடியிருப்புக் கட்டிடம் சரிந்ததில் 64 பேர் பலி.

இந்தியாவின் கிழக்கு டில்லி லக்ஷ்மி நகரில் அமைந்துள்ள குடியிருப்புக்கட்டிடம் ஒன்று நேற்றிரவு சரிந்து வீழ்ந்ததில் 64 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் 80 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தக் கட்டிட இடிபாட்டிற்குள் 30 பேர் வரை சிக்குண்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்தக் குடியிருப்பு கட்டிடத்தில் சுமார் 400 முதல் 500 பேர் வரை வசித்து வந்தாகத் தெரிவிக்கப்படுகிறது.
பருவ மழைவீழ்ச்சி காரணமாக கட்டிடத்தின் அடித்தளம் உறுதியற்று காணப்பட்டதால் இக்கட்டிடம் இடிந்து வீழ்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment