கிழக்கில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள விவசாயகளுக்கு உதவும் திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள விவசாயக் குடும்பங்களின் விவசாய நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் இலவசமாக விதை நெல்லையும் உர வகைகளையும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த கோமரன்கடவல பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 300 விவசாய குடும்பங்களுக்கு விதை நெல்லும் உரங்களும் வழங்கப்பட்டன.
உலக உணவுத் திட்டம் இதற்கு உதவி வழங்குகிறது.
ஒரு ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் வேளாண்மை செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கே இவ்வாறான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment