சட்டவிரோதமான முறையில் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாரிய வேப்பை மரக்குற்றிகளை கடத்திய நபரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர். இவரிடமிருந்து பெறுமதியான 15 வேப்பை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதி;காரி ஜி. ஜெயவர்த்தன தெரிவித்தார்.
லொறியொன்றின் மூலம் கடத்திவரப்பட்ட இம்மரக்குற்றிகள் ஆரையம்பதி பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போது பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடத்திவரப்பட்ட லொறி தப்பியோடியுள்ளதுடன் பொலிஸார் லொறியைத்தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
No comments:
Post a Comment