Sunday, November 21, 2010

ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலம் அபிவிருத்தியை நோக்கிய இலக்காகும் கருணா அம்மான்.


மீளக்குடியமர்த்தப்படும் மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்காக நீங்கள் கடந்தகாலங்களில் இலங்கையிலுள்ள பல தூதரகங்களுடன் பேச்சு நடத்தினீர்கள். எமக்கு சாதகமான பதில்கள் கிடைத்துள்ளவா?
ஜப்பான் தூதுவரோடு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பயனாக பாரிய அபிவிருத்தி திட்டங்கள் கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பெருந்தொகையான நிதியை ஜப்பான் வழங்கியுள்ளது. அதேபோன்று ஐரோப்பிய தூதரகங்களுடனும் பேசியிருக்கிறேன். அவர்களுக்கு நிலைமையை தெளிவுபடுத்தியிருக்கிறேன்.
இலங்கை தொடர்பாக அவர்களுக்கு ஒரு தவறான கண்ணோட்டம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதனை தெளிவுபடுத்தி நிலைமையை விளங்க வைத்திருக்கிறேன். இப்போது எல்லோருக்கும் நன்றாக விளங்குகிறது. 30 வருடமாக யுத்தம் நடந்த நாட்டில் எல்லாவற்றையும் ஒரே இரவில் பூர்த்தி செய்துவிடமுடியாது. அதற்கு சிறிது காலம் தேவை. அந்த காலம் இப்போது எமக்கு வந்திருக்கிறது. இதில் சிறப்பான அம்சம் என்னவென்றால் ஜனாதிபதியே நேரடியாகச் சென்று அந்தந்த மாவட்டங்களின் அபிவிருத்தியை கவனித்து வருவதுதான்.
அபிவிருத்தி கூட்டங்களை நடத்துகிறார். அபிவிருத்தி பணிகளின் நிலை என்ன? அதிகாரிகள் ஒழுங்காக செயற்படுகிறார்களா? என்பதை அவதானித்து வருகிறார். பிரதேச அபிவிருத்தியின் மீதும் அந்தப் பகுதி மக்களின் மீதும் ஜனாதிபதி கொண்டுள்ள அக்கறையையே இது காட்டுகிறது. இதுவரை எந்த ஜனாதிபதியும் இவ்வாறு செயற்பட்டதில்லை. பல கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்யப்பட்டுள்ளன. இலங்கைக்கு கிடைத்த நிதியில் 75 சதவீதமான நிதி வடக்கு, கிழக்குக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
வடக்கில் வீதி அபிவிருத்திக்காகவே பெருந்தொகையான நிதி ஒதுக்கப்பட்டது. யுத்தகாலப் பகுதியில் ஏனைய பகுதிகள் பராமரிக்கப்பட்டு வந்தபோது வடக்கு, கிழக்கு கவனிப்பாரற்று கிடந்தது. இன்று அந்த நிலை மாறியிருக்கிறது.
அடுத்தாண்டு முன்னெடுக்கப்படவுள்ள ஏதாவது அபிவிருத்தி திட்டங்கள் உள்ளனவா?
ஆம், அடுத்தாண்டு மாசி மாதமளவில் நேர்ப் நெக்டப் என்ற திட்டங்களின் ஊடாக பாரிய அபிவிருத்தி திட்டங்கள் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ளன. ஆகிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இவை முன்னெடுக்கப்படவுள்ளன.
என்னென்ன திட்டங்கள் எனக் கூற முடியுமா?
அனைத்தும் கட்டுமானத் திட்டங்கள், பாடசாலைக் கட்டங்கள், அபிவிருத்தி கட்டங்கள் உட்பட கூடுதலாக கட்டட நிர்மாணத்துக்காகவே செலவிடப்படவுள்ளது. இவ்வாறான பாரிய திட்டங்கள் வடக்கு நோக்கி கொண்டு செல்லப்படவுள்ளன. அதற்கிடையே சில தீய சக்திகள் எதுவும் நடக்கவில்லை என பொய்ப் பிரசாரம் செய்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள் இந்த விடயத்தில் மிகத் தெளிவாக இருக்கவேண்டும்.
மக்களை மீளக்குடியமர்த்துவதும், அவர்களுக்கு உலர் உணவு வசதிகளை வழங்குவதும் மட்டுமல்லாது அவர்கள் தாமாகவே எழுந்து நிற்பதற்கு ஏதுவாக வாழ்வதார உதவிகள் வழங்கப்படுகின்றனவா?
எமது அமைச்சினூடாக மட்டுமல்லாமல் ஏனயை அமச்சுக்கள் ஊடாகவும் இவை பெற்றுக்கொடுக்கப்படுகின்றன. வீடு இல்லாதவர்களுக்கு தற்காலிக கொட்டில்கள் அமைப்பது போல ஆறு மாத காலத்துக்கு உலர் உணவுகள் வழங்கப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து விவசாயத்துக்காக உபகரணங்கள், விதை நெல், உரம் மீன்பிடிக்கான உபகரணங்கள், கால்நடை வளர்ப்புக்கான உதவி என்பன வழங்கப்படுகின்றன. அத்துடன் விவசாயிகளுக்காக குளங்களை புனரமைத்துக் கொடுத்தல் போன்ற பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
வடக்கிலோ, கிழக்கிலோ தமிழ் மக்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் அநீதிகள் இடம்பெறும் போதும் நீங்கள் அரசாங்கத்தின் ஒரு அங்கத்தவராக இருப்பதால் பேச முடியாதவராக இருக்கிர்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. உண்மைதானா?
முற்றிலும் தவறான கருத்து, நான் அரசாங்கத்துக்குள் இருப்பதால் தான் தமிழ் மக்களுக்கு கூடுதலான நன்மைகள் கிடைத்திருக்கிறது. எதிராக இருந்தால் ஒரு நன்மையும் கிடைத்திருக்காது. நான் இன்று அரசாங்கத்தைச் சேர்ந்த தமிழ் அமைச்சராக இருக்கிறேன். அரசாங்கத்துக்குள் ஏனைய கட்சிகள் இருந்தாலும் எனக்கு தமிழ் மக்கள் மத்தியில் வேலைகளை செய்வதற்கு கூடுதல் அதிகாரம் இருக்கிறது. அதுமட்டுமல்ல ஸ்ரீல. சு. க. வின் உப தலைவராக இருக்கிறேன். ஸ்ரீல. சு. க தலைவர் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும் ஸ்ரீல. சு. க கூட்டங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை பேசி இருக்கிறேன். ஆகவே நான் அரசுக்குள் இருப்பதால் சிறந்த பலன்களை மக்கள் அனுவித்துக்கொண்டு வருகிறார்கள்.
வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு எல்லா அமைச்சர்களையும் அழைத்துச் செல்கிறோம். அதனூடாக வளங்களை கொண்டு செல்கிறோம். இதனால் பாரிய அபிவிருத்தி, பணிகள் மக்களுக்காக முன்னெடுக்கப்படுகிறது. எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் தங்களது கதிரைகளை தக்கவைக்க வேண்டும் என்பதற்காக இனவாதத்தை துவேசத்தை பேசிப் பேசியே மக்களின் காலத்தை கழித்துக்கொண்டு போகிறார்களே தவிர வேறு எதுவித அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்க முடியவில்லை.
மக்களின் கண்ணீரை துடைக்கப்போவது இல்லை. இப்போது மக்கள் யுத்தம் வேண்டாம் என்ற விடயத்தில் தெளிவாக இருக்கிறார்கள். நாம் அவர்களை சந்தித்த போதெல்லாம் அவர்கள் பாடசாலையை கட்டித் தாருங்கள். கடற்றொழில் செய்வதற்கான உதவிகள் செய்யுங்கள். கமத்தொழில் செய்வதற்காக உதவி செய்யுங்கள் என அபிவிருத்தி பற்றித்தான் கேட்கிறார்களே தவிர வேறு சிந்தனை மக்களுக்கு கிடையாது. இனத்துவேசம் பேசிப் பேசியே மீண்டும் மீண்டும் பிரச்சினைகளை உருவாக்குகின்ற அரசியல்வாதிகளை மக்கள் இனங்கண்டுகொள்ள வேண்டும். அப்படியில்லாமல் இவர்களின் பேச்சைக் கேட்டு இவர்களது பின்னால் சென்றால் இன்னுமொரு பாரிய அழிவை நோக்கி செல்வதாகவே அமையும். தூண்டுதல்களை ஏற்படுத்துகின்ற அரசியல்வாதிகளை இனங்கண்டு புறம் தள்ளுவதோடு மட்டுமல்லாமல், தங்களுக்கு நன்மைகளைத் தேடித்தரும் அரசியல்வாதிகளை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.
தமிழ் மக்களுக்கு தேவையான அனைத்து நன்மைகளையும் செய்ய வேண்டும் அவர்கள் இழந்தவற்றை மீண்டும் பெற்றுக்கொடுக்க வேண்டும். இந்த மக்கள் மீண்டும் இருண்ட யுகத்துக்கு செல்லக்கூடாது என்ற நோக்குடன் செயற்படும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அனைவரும் இணைந்து செயற்பட்டால் சுபிட்சமான எதிர்காலத்தை நோக்கி தமிழ் மக்களால் பயணிக்க முடியும். அவரது இரண்டாவது பதவிக்காலம் என்பது பொருளாதார அபிவிருத்தியை நோக்கிய பயணம். அதில் நாம் அனைவரும் உறுதியுடன் இணைந்துகொள்வோம்.
அரசு முன்னெடுக்கும் அபிவிருத்தி பணிகள் குறித்து நீங்கள் திருப்தியடைகிர்களா?
வீதி அபிவிருத்தி என்பதை இலங்கை சரித்திரத்திலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலேயே பார்க்கிறோம். எங்கு பார்த்தாலும் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. கார்ப்பட் வீதிகளை பார்க்கிறோம். எத்தனையோ பாலங்களை பார்க்கிறோம். திருகோணமலையிலிருந்து நாங்கள் மட்டக்களப்புக்கு போவோமா? இது நடக்கிற காரியமா? என்றெல்லாம் எண்ணினோம். ஆனால் இன்று மிக அழகான பாரிய பாலங்கள் கட்டப்பட்டு திருமலை- மட்டு இணைக்கப்பட்டுள்ளது.
நாடு கடந்த தமிழம் இலங்கைக்கு எந்தவிதமான அச்சுறுத்தலை ஏற்படுத்தப்போகிறது?
எந்த விதமான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தப் போவதில்லை. நாடு கடந்த தமிbழத்தால் பாதிக்கப்படப் போவது தமிழ் மக்கள் தான். உலகத்திலுள்ள எந்த நாடும் இதனை அங்கீகரிக்கப்போவதும் இல்லை.
தமிழ் மக்கள் இதனால் ஏன் பாதிக்கப்படப்போகிறார்கள் என்றால், 15, 000 பேர் தடுத்துவைக்கப்பட்டனர். இவர்கள் தொடர்பாக நாம் ஜனாதிபதியுடன் பேசினோம். இவர்களை சிறைக்கு கொண்டு செல்லாமல் தனியாக தடுத்து வைத்து புனர்வாழ்வளிப்போம். சிறைக்கு கொண்டு சென்றால் ஒவ்வொருக்கும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டி வரும். இதற்கு 10-15 வருடங்கள் கூட போகலாம். எனவே புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைத்து புனர்வாழ்வளித்து படிப்படியாக இவர்களை சமூகத்துடன் இணைத்து விடுவோம் என்ற யோசனையை ஜனாதிபதியிடம் முன்வைத்தோம். அதன்படி அவர்களை சமூகத்தில் இணைத்துக்கொண்டு வருகிறோம். நாடு கடந்த தமிbழம் அமைக்கப்படு வது ஒருபுறமாகவும், இங்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் தனிநாடு பற்றிப் பேசுவதும் இளைஞர் யுவதிகளின் விடுதலைக்கு தடையாக அமைந்துவிடும். அரசுக்கு ஒரு சந்தேகம் எழுந்துவிடும். இவர்களை விடுதலை செய்தால் மீண்டும் இணைந்து செயற்பட்டு விடுவார்களோ என்ற அச்சமும் அரசுக்கு ஏற்பட்டுவிடும். இவைதான் தமிழ் மக்களுக்குள்ள பாதிப்புகள், அரசாங்கத்துக்கு இதனால் பாதிப்புகள் ஏற்படப்போவதில்லை.
பெரும்பாலும் வடக்கு கிழக்கு மக்கள் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை. என்றாலும் ஜனாதிபதி இன்று வடக்கு கிழக்கு அபிவிருத்தியில் கண்ணும் கருத்துமாக செயற்படுகிறார். பல கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தவித புறக்கணிப்பும் இல்லை. இதனை தமிழ் மக்களும் உணர்ந்துகொள்ள வேண்டும். புலம் பெயர்ந்துள்ள மக்களும் தேவையில்லாத பிரச்சினைகளுக்குள் செல்லாம் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு உதவ முன்வர வேண்டும். புலம் பெயர்ந்த மக்கள் ஒவ்வொருவரும் நினைத்தால் வன்னி மக்களுக்கு ஒவ்வொரு வீட்டை இலகுவாக கட்டிக்கொடுக்க முடியும். வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கு இவை பெரிய சுமையாக இருக்காது
இவ்வாறான நல்ல காரியங்களுக்கு புலம் பெயர்ந்தவர்கள் முன்வராமல் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.
கற்றுக்கொண்ட பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த முதலமைச்சர் சந்திரகாந்தன் கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவம் ஒன்றை சுட்டிக்காட்டி பேசியபோது நீங்கள் தான் மன்னிப்புக் கோர வேண்டும் எனக் கூறியிருந்தார். இதுபற்றி கூறமுடியுமா?
உண்மையாக ஆணைக்குழு முன் முதலமைச்சர் அப்படிக் கூறவில்லை. அவர் கூறிய கருத்துவேறு. கடந்தகாலங்களில் பல பிழைகள் நடந்துள்ளன. அப்படியானால் எல்லோரும் மன்னிப்பு கேட்க வேண்டிவரும். கருணா அம்மான் தான் மன்னிப்பு கேட்கவேண்டும் என்ற வார்த்தை பிள்ளையானிடமிரு ந்து வரவில்லை. அந்த சந்தர்ப்பத்தில் பதிவு செய்யப்பட்ட ஒளிப்பதிவு நாடாவையும் நான் கேட்டேன். சில ஊடகங்கள் தவறான பிரசாரங்கள் மேற்கொண்டன. கடந்தகால நிகழ்வுகளை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு இந்த நாட்டை ஒரு சமாதான நிலைக்கு கொண்டு வந்திருக்கிறோம். இதில் ஜனாதிபதியின் பங்களிப்பு மிக முக்கியமானது. எனவே கிடைத்த சமாதானத்தை தக்க வைப்பதற்காக சகலரும் உழைக்க வேண்டும்.
அதைவிடுத்து பழைய பிரச்சினைகளையும், பழைய புரையோடிப்போன விடங்களையும் ஆளுக்கு ஆள் கிண்டிக் கிளறிக் கொண்டிருப்போமானால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. போரினால் நிறையவே இழந்துவிட்டோம். வீட்டுக்கு வீடு இழப்பு ஏற்பட்டிருக் கிறது. எனது உடன் பிறந்த அண்ணனையே இழந்திருக்கிறேன். இவற்றில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய விடயம் என்னவென் றால் இவை அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு கிடைத்த சமாதான த்தை தக்க வைப்பதற்குரிய விதத்தில் அனைவரது செயற்பாடும் இருக்கவேண்டும் என்பது தான் எனது அன்பான வேண்டுகோளாகும்.

No comments:

Post a Comment