Thursday, November 11, 2010

கருணா அம்மானின் பிறந்த தினத்தையொட்டி மட்டக்களப்பில் பல்வேறு ஆன்மீக, அற நிகழ்வுகள்.

மீள்குடியேற்ற பிரதி அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவருமான கருணா அம்மானின் 44ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்கினேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
இதில் அமைச்சின் அதிகாரிகள், மட்டக்களப்பு கட்டட ஒப்பந்த காரர்கள் சங்கத்தின் பிரதி நிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
பூஜையைத் தொடர்ந்து மட்டக்களப்பு இந்து மகளிர் மன்றத்தினால் நடத்தப்பட்டுவரும் அறநெறிப்பாடசாலை மாணவ மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
கருணா அம்மானின் பிறந்தநாளை முன்னிட்டு இலண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் அனுசரணையில் இயங்கிவரும் பழுகாமம் விபுலானந்தா சிறுவர் இல்லத்திலுள்ள சிறுவர்களுக்கு ஆடைகள் வழங்கப்பட்டன.
அதனையடுத்து மட்டக்களப்பு புனித வளனார் முதியோர் இல்லத்திலுள்ள முதியவர்களுக்கு அன்பளிப்புப் பொதிகள் வழங்கப்பட்டன.
அத்துடன் சித்தாண்டியிலுள்ள யோகர் சுவாமிகள் மகளிர் இல்லத்திலுள்ள சிறுமிகளுக்கு ஆடைகள் வழங்கப்பட்டது. அத்துடன் சந்திவெளியிலுள்ள மாணிக்கவாசகர் சிறுவர் இல்லத்தீலுள்ள சிறுவர்களுக்கும் ஆடைகள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
இறுதியாக கிரான் பிரதேசத்திலுள்ள வயோதிபர்களுக்கு ஆடைகள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
இந்த நிகழ்வுகளில் மீள்குடியேற்ற அமைச்சின் இணைப்புச் செயலாளர்களான பொன்.ரவீந்திரன், திருமதி உருத்திரமலர் ஞானபாஸ்கரன், மட்டக்களப்பு கட்டட ஒப்பந்தகாரர் சங்கத்தின் தலைவர் எஸ்.வசந்தராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment