Tuesday, November 30, 2010

இளவாலை வித்தகபுரம் பாகுதிகளில் ஒரு மாதத்திற்குள் மீள்குடியேற்றம் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவிப்பு.

இளவாலை வித்தகபுரம் பாகுதிகளில் ஒரு மாதத்திற்குள் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படும் என பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
யாழ். குடா நாட்டில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் உள்ளடக்கப்பட்டிருந்த இளவாலை மற்றும் வித்தகபுரம் பிரதேசங்களில் அடுத்துவரும் ஒரு மாத காலத்திற்குள் மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவர் என்று அவர் குறிப்பிட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி கேட்டிருந்த வாய்மூல விடைக்கான வினாவுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில் யாழ்ப்பாணம் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் வசித்த மக்களை கட்டம் கட்டமாக மீள்குடியேற்றி வருகிறௌம்.
இதன்படி இளவாலை வடமேற்கு வித்தகபுரம் இளவாலை வடக்கு ஆகிய பகுதிகளில் ஒருமாத காலத்தில் மக்கள் மீள்குடியேற்றப்பட உள்ளனர்.
இதேபோன்று மயிலிட்டியில் கண்ணி வெடி அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு விரைவில் அங்கும் மீனவ குடும்பங்கள் மீள்குடியேற்றப்படுவர்.
மயிலிட்டி அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளது. அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள மக்களை கட்டம் கட்டமாக மீள்குடியேற்ற பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அனுமதி வழங்கியுள்ளார்.
மயிலிட்டியில் மக்களை மீள் குடியேற்றுவதற்காக கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு யாழ். இராணுவத்தளபதியுடன் பேசி நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இங்கு மக்களை மீள் குடியேற்ற ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment