Monday, November 22, 2010

இந்திய அமைச்சர் கிருஷ்ணாவின் இலங்கை விஜயம் வடக்கில் அபிவிருத்தித் திட்டங்களும் அங்குரார்ப்பணம்.

இலங்கை வரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வடக்கில் அபிவிருத்தித் திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளார்.
எதிர்வரும் 27ம் திகதி சனிக்கிழமை வட மாகாணத்திற்கு அவர் விஜயம் செய்யவுள்ளார்.
யாழ்ப்பாணம் மன்னார் மாவட்டங்களுக்கு செல்லும் எஸ்.எம். கிருஷ்ணா இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு பாரிய அபிவிருத்தித் திட்டங்களையும் உத்தியோகபுர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
வட மாகாணத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் ஐம்பதாயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவித்த வட மாகாண ஆளுநர் இவற்றில் ஆயிரம் வீடுகளை புதிதாக நிர்மாணிக்கும் பரீட்சார்த்த நடவடிக்கையை யாழ்ப்பாணத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஆரம்பித்து வைக்கவுள்ளார் என்றார்.
யாழ். நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்திய கவுன்ஸிலர் பிரிவையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதேவேளை மதவாச்சி முதல் தலைமன்னார் வரையிலான ரயில்பாதை அமைக்கும் பணிகளும் இந்திய அரசின் நிதியுதவியில் முன்னெடுக்கப்படவுள்ளது. இதனை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஆரம்பித்து வைக்கவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேலும் தெரிவித்தார்

No comments:

Post a Comment