Wednesday, January 6, 2010

கிழக்கில் 140 பாடசாலைகளை திறக்க நடவடிக்கை!

கிழக்கு மாகாணத்தில் அசாதாரண சுழ்நிலை காரணமாக பல வருடங்களாக மூடப்பட்டிருந்த 140 பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
தற்போது கிழக்கு மாகாணத்தில் 1015 தமிழ்,சிங்கள பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
68 பாடசாலைகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்படும் நிலையிலுள்ளன.
இவ்வருடத்திற்குள் மூடப்பட்டிருந்த பாடசாலைகளுக்கு மேலதிகமாக புதிய பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment