Tuesday, January 19, 2010

சம்மந்தன் ஜயாவுக்கு.........

ஜயா
நீங்கள் இன்னும் நித்திரை விட்டு எழும்பவில்லை
என்றால் மற்றவர்களும் நித்திரை விட்டு எழும்பவில்லை
என்றா நினைக்கின்றீர்கள் யாருடைய காலத்தில்
சிங்கள குடியேற்றம் இன அழிப்பு நடந்தது என்பதை
மறந்து விட வேண்டாம்
எங்களை காப்பாற்ற எங்களுக்கு தெரியும் இவ்வளவு
காலமும் இல்லாத அக்கறையும் கவலையும் இப்பொழுது
ஏன் ஏற்பட்டது என்பது புரியாத புதிராக இருக்கின்றது
நீங்கள்(கூட்டமைப்பு) எங்களுக்கு செய்த நம்பிக்கை
துரோகம் மாதிரி வேறு எவரும் எங்களுக்கு துரோகம்
செய்யவில்லை
இன்று நாங்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும்
வாழ்கிறோம் இதனை குலைக்க வேன்டாம் எங்களை
நிம்மதியாக வாழ விடுங்கள் முடிந்தால் மற்ற
மக்களையும் நிம்மதியாக வாழ விடுங்கள்
அன்புடன்
கிழக்கில் இருந்து ஒருவன்


சம்மந்தன் ஜயாவின் அறிக்கை கீழே

மகிந்த மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கிழக்கு மாகாணம் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்படும் - சம்பந்தன்
தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாக பதவி ஏற்றால் கிழக்கு மாகாணம் முழுவதும் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு விடும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
எதிர் கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கில் மேற்கொண்டு வரும் பரப்புரை நடவடிக்கையின் போதே சம்பந்தன் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் சொந்தமாக வாழ்விடங்களை தற்போதைய அரசு ஆக்கிரமித்து வருவதாகவும் மகிந்த ராஜபக்ச மீண்டும் பதவி ஏற்றால் அந்த பகுதிகள் முற்றாக பறிபோய்விடும் என்றும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment