Tuesday, January 19, 2010

மஹிந்த சிந்தனையின் நோக்கு பொருளாதார அபிவிருத்தியே பிரதமர் தெரிவிப்பு.....

மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு என அரசாங்கம் முன்வைத்துள்ள கொள்கைப் பிரகடனம் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவது தொடர்பானதேயாகும் என பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
கட்டுநாயக்கவில் நேற்று இடம்பெற்ற ஜனஹமுவ நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்
2005ஆம் ஆண்டு நாம் மஹிந்த சிந்தனை கொள்கை பிரகடனத்தை முன்வைத்தோம். நாட்டில் சமாதானம் ஏற்படுவது தொடர்பாக அதில் முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது. அதனை நாம் வெற்றிகரமாக நிறைவேற்றினோம். அத்துடன் அபிவிருத்தியிலும் எமக்கு வெற்றியைப்பெற முடிந்தது.
மஹிந்த சிந்தனை 2 இல் குறிப்பிட்டுள்ளவாறு திட்டமிட்ட வேலைத் திட்டத்தின் மூலம் நாட்டில் தன்னிறைவை ஏற்படுத்துவதே அரசின் நோக்கமாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment