Friday, January 15, 2010

வடக்கு கிழக்கில் 150000 வீடுகளை அமைக்கத் திட்டம்!

மஹிந்த சிந்தனை திட்டத்தின் ஊடாக வடக்கு கிழக்கில் 1 இல்சத்து 50000 வீடுகளை அமைக்க இவ்வருட வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கப்படவுள்ளது.
மஹிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கின் கீழ் நாட்டில் வீடு இல்லாதவர்களின் வசிப்பிட வசதிக்காக 6 இலட்சம் வீடுகளை எதிர்வரும் 6 வருடங்களில் அமைக்கும் திட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கில் 150000 வீடகள் அமைக்கப்படவுள்ளன.
இவற்றுக்குப் புரம்பாக அரச ஊழியர்களுக்கான 25 வீடமைப்புத் திட்டங்கள் பல்கலைக்கழக உத்தியோகத்தர்களுக்கான 5000 வீடுகளைக் கொண்ட வீடமைப்புத் திட்டம் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் உள்ளவர்களுக்கான 3 வீடமைப்புத் திட்டங்கள் மற்றும் கொழும்பு குடிசை வாசிகளுக்கான விடமைப்புத் திட்டம் போன்றவையும் மேற்கொள்ளப்படவுள்ளன.
கிராமப்புரங்களில் வீடு இல்லாதவர்களுக்கு வீடுகளை அமைப்பதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் மற்றும் மீனவ சமூகத்தவர்களுக்கும் வசிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment