Wednesday, January 6, 2010

சரத் பொன்சேகாவின் ஆயூத கொள்வனவு ஊழல் ஆவணங்கள் மூலம் நிரூபனம்!

அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நிறுவனத்திலிருந்து இலங்கைக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக ஜெனரல் சரத்பொன்சேகா போலி நிறுவமொன்றை நடத்திவந்துள்ளமை ஆவணங்கள் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது.
ஜெனரல் சரத் பொன்சேகாவின் இந்த ஆயுதக் கொள்வனவு ஊழல் தொடர்பான ஆவணங்கள் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
ஆயுதங்களை கொள்வனவு செய்வது தொடர்பான கேள்விப் பத்திரங்களை ஏற்றுக்கொள்ளும் சபைக்கு பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி என்ற ரீதியில் சரத் பொன்சேகாவே தலைவராக இருந்தார்.
எனினும் தனது மருமகனான தனுன திலகரத்னவின் பெயரில் பதிவுசெய்யப்பட்டிருந்த ஹைக்கோப் இன்டர் நெஷனல் நிறுவனத்திடமிருந்தே ஆயுதம் கொள்வனவு செய்யப்படுகின்றது என்ற உண்மையை சரத் பொன்சேகா வெளியே தெரியாமல் மறைத்தார் என்பதை ஹைக்கோப் இன்டர் நெஷனல் நிறுவனத்தின் இணையத்தளம் உறுதிசெய்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் பதிவு செய்யப்பட்ட பிரிட்டிஷ் போனியோ டிபென்ஸ் என்ற நிறுவனம் என காண்பித்து டெக் சாசில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நிறுவனத்திலிருந்து இலங்கைக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக ஜெனரல் சரத்பொன்சேகா போலி நிறுவமொன்றை நடத்திவந்துள்ளமை தெரியவந்துள்ளது
ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஆயுதக் கொள்வனவு ஊழல் தொடர்பான ஆவணங்கள் நேற்று பாராளுமன்றத்தில் சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வாவினால் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது
அவுஸ்திரேலியாவில் பதிவு செய்யப்பட்ட பிரிட்டிஷ் போனியோ டிபென்ஸ் என்ற நிறுவனம் என காண்பித்து டெக் சாசில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நிறுவனத்திலிருந்து இலங்கைக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக ஜெனரல் சரத்பொன்சேகா போலி நிறுவமொன்றை நடத்திவந்துள்ளமையை அமைச்சர்கள் தங்களது உரையின்போது இதனை சுட்டிக்காட்டினர்.
இந்த சட்டவிரோத ஆயுதக் கொள்வனவால் கமிஷனாகக் கிடைத்த பணம் வெளிநாட்டு இரகசிய வங்கியொன்றில் வைப்புச்செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment