Tuesday, January 25, 2011

ரஷ்ய விமான நிலையத்தில் பாரிய குண்டு வெடிப்பு! 35 பேர் பலி 100 க்கும் அதிக பயணிகள் காயம்.

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் டெமோட்டோவோ விமான நிலையத்தில் இடம்பெற்ற பாரிய குண்டுவெடிப்பில் 35பேர் பலியாகியுள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்தவர்களில் 20 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று ரஷ்யாவின் தலைமை விசாரணை அதிகாரி கூறி யுள்ளார்.
இக்குண்டுத்தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உட்பட உலகநாடுகளின் தலைவர்கள் பலர் கண்டனம் வெளியிட்டுள்ளனர்
தாக்குதலை நடத்தியவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவர் என்று ரஷ்ய ஜனாதிபதி டிமெற்றி மெத்தேவ் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment