Sunday, January 16, 2011

சங்குப்பிட்டி பாலம் இன்று மக்களின் பாவனைக்காக.

288 மீற்றர் நீளம கொண்ட சங்குப்பிட்டி பாலம் மக்களின் பாவனைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வினால் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டவுள்ளது. இப் பாலத்தை நிர்மாணிப்பதற்காக 1037 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இந்தப்பாலம் நிர்மாணிக்கப்பட்டதன் மூலம் சுமார் 110 கிலோமீற்றர் தூரம் குறைவதுடன் பயண நேரமும் 3 மணித்தியாலத்தால் குறைவடைகின்றது. இரு வழிப் பாதைகளைக் கொண்ட இந்தப்பாலம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப் பட்ட பின்னர் இரு பகுதிகளிலிருந்தும் பஸ்களில் பெருந்தொகையான மக்கள் பயணம் செய்ய ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment