எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரசாரங்களுக்காக அரச உடமைகளை பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேர்தல் ஆணையாளர் நாயகம் இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்றை சகல அமைச்சுக்களினதும் செயலாளர்கள் மாகாண சபை செயலாளர்கள் ஆளுநர்களின் செயலாளர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அரச திணைக்கள கூட்டுத்தாபன வாகனங்களை பிரசார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தல் பாடசாலைகள் போன்ற அரச காணிகளில் பிரசார பதாகைகளை நிறுவுதல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்காக அரசுக்கு சொந்தமான விடுதிகள் சுற்றுலா விடுதிகளில் தங்குவதற்கு இடமளித்தல் போன்றவற்றை தவிர்க்குமாறும் தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment