Thursday, January 13, 2011

மட்டு. அம்பாறை வெள்ளத்தில் மூழ்கின இலட்சக்கணக்கானோர் அவலம் நிர்க்கதி.

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் தொடராகப் பெய்துவரும் அடை மழை காரணமாக அனர்த்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சீரற்ற காலநிலை தொடர்வதால் பாதிப்புக்கு உள்ளாகும் மக்களினதும் இடம்பெயர்பவர்களினதும் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட ங்கள் நீரினால் சூழப்பட்டிருப்பதால் அவசர நிவாரணப் பொருட்களை தரை வழியாக எடுத்துச் செல்லுவதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
சீரற்ற காலநிலையால் தொடராக மழை பெய்து வருவதன் காரணமாக நாட்டில் 2 இலட்சத்து 28 ஆயிரத்து 78 (228078) குடும்பங்களைச் சேர்ந்த 8 இலட்சத்து 63 ஆயிரத்து 773 பேர் பாதிக்க ப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி நேற்றுத் தெரிவித்தார்.
வெள்ள நிலையி னால் பாதிக்கப்பட் டிருப்பவர்களில் 33 ஆயிரத்து 330 குடும்ப ங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 598 பேர் 359 முகாம்களில் தங்க வைக் கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர் பாக அவர் மேலும் கூறுகை யில் சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 882 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட் சத்து 82 ஆயிரத்து 323 பேர் பாதிக் கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 15 ஆயிரத்து 368 குடும்பங்களைச் சேர்ந்த 58 ஆயிரத்து 524 பேர் 146 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வெள்ளத்தினால் அம்பாறை மாவட்டத்தில் 88 ஆயிரத்து 376 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 38 ஆயிரத்து 470 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7813 குடும்பங்களைச் சேர்ந்த 28 ஆயிரத்து 744 பேர் 49 முகாம்களில் தங்கியுள்ளனர்.
பொலன்னறுவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 2415 குடும்பங்களைச் சேர்ந்த 11011 பேர் 59 முகாம்களில் தங்கியுள்ளனர். திருமலை மாவட்டத்தில் 7559 குடும்பங்களைச் சேர்ந்த 27 ஆயிரத்து 940 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7323 குடும்பங்களைச் சேர்ந்த 27 ஆயிரத்து 478 பேர் 73 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
இதேநேரம் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் வெள்ள நீரினால் பெரும்பாலான பிரதேசங்களுக்குரிய தரைவழிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வீதிகள் மூன்று நான்கு அடிகள் நீரில் மூழ்கியுள்ளன.
வெள்ள நீரினால் சூழப்பட்டிருக்கும் பிரதேசங்களிலிருந்து விமானப் படையினரும், கடற்படையினரும் ஹெலிகள் மற்றும் படகுகளின் உதவியுடன் மீட்புப் பணியிலும், நிவாரண நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள பெரும்பாலான அரச கட்டடங்கள், வீடுகள், தனியார் நிறுவனங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதேவேளை, ஆஸ்பத்திரிகள், பாடசாலைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் பலவற்றினுள்ளும் வெள்ள நீர் புகுந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுக்கடங்காத வெள்ள நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதிலும் பெரும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக குடிநீர் வழங்கல் பிரிவினர் குறிப்பிட்டிருக்கின்றனர்.

No comments:

Post a Comment