Tuesday, January 4, 2011

விழித்தெழுவோம் விடுதலை பெறுவோம்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் அண்மையில் ஆபிரிக்க ஐரோப்பிய பயணங்களை மேற்கொண்டு இருந்தபோது புலிகளின் பினாமி ஊடகங்களும் யாழ் மேலாதிக்க சக்திகளும் அவருக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தன. கிழக்கின் அபிவிருத்திக்கு கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக யாழ் மேலாதிக்கம் தடையாகவே இருந்து வந்துள்ளது என்பது கிழக்கின் முதுபெரும் அரசியல் அறிஞர்களின் அனுபவம் இந்த கசப்பான அனுபவத்தின் எல்லை கடந்த பொறுமையின் வெளிப்பாடுதான் அஷ்ரப்பின் வெளியேற்றம் ஆகும்.
கிழக்கின் முதல்வர் கௌரவ சந்திரகாந்தனையும் பிரதி அமைச்சர் முரளிதரனையும் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்று கூறுவதற்கு இந்த யாழ் மேலாதிக்க வாதிகளுக்கு என்ன அருகதை இருக்கின்றது. அல்பிரட் துரையப்பாவில் தொடங்கி ஆயிரக்கணக்கான தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களை எல்லைக்கிராமங்களிலும் பள்ளிவாசல்களிலும் கொன்று குவித்த பிரபாகரனையும் அவரது கூட்டத்தையும் எந்த நீதி மன்றத்தில் ஏற்றப்போகின்றார்கள் இவர்கள்!. யாழ் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோது இடிவிழும் என்று பாராளுமன்றத்தில் அஷ்ரப் இட்ட சபதம் முள்ளிவாய்க்காலில் முடிந்து இருக்கின்றது. இறைவனின் தீர்ப்பை ஏற்க மறுக்கும் இந்த கூட்டம் இந்து மதத்திற்கே அவமானம்.
ராஜிவ் காந்தி அமிர்தலிங்கம் கதிர்காமர் அஷ்ரப் இப்படி எத்தனையோ ஆற்றல் மிகு தலைவர்களை அழித்து தானும் மண்டை பிளந்து அழிந்துபோன தண்டனையாவது உங்களுக்கு சிந்தனையை தூண்டவில்லை என்றால் அது உங்களின் வெறியைத்தான் காட்டுகின்றது.
வாகரையில் 89 கிழக்கிலங்கைப் பெண் போராளிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை யாழ் மேலாதிக்க சக்திகள் மறந்து போனமை கவலையளிக்கிறது.
சகோதரப்படுகொலைகளுக்கு சர்வதேச ரீதியில் பெயர்போன புலிகள் வெளிநாடு வந்தபோது நீதிமன்றில் நிறுத்தக்கோராது. இப்போது மட்டும் கிழக்கு தலைமையை குற்றம் சாட்டுவது உங்களின் குள்ளத்தனங்களுக்கு கிழக்கு மக்கள் அடிபணியப் போவதில்லை வேண்டுமானால் ஸ்ரீலங்கா இராணுவத்தில் சிக்கும் வரையும் நிராஸ்இ தவராஜாஇ துரைரெட்ணம்இ வேதநாயகம் போன்ற கூலிக்கு மாரடிக்கும் குள்ள நரிகள் உங்களுக்கு வக்காளத்து வாங்கலாம். கிழக்கு மக்களோ தும்புத் தடிகளையும் செருப்பு மாலைகளையும் தயாராக வைத்திருக்கின்றார்கள்.
கருணாவும் பிள்ளையானும் இல்லாமல் போனதுதான் புலிகளின் அழிவுக்கு காரணம் என்பதை இப்போதாவது பரிந்து கொள்ளுங்கள் கிழக்கில் நீங்கள் துரத்தி துரத்திச் சுட்ட போராளிகளும் கொழும்பில் நயவஞ்சகமாக நஞ்சு போட்டுக் கொன்ற போராளிகளும் இருந்திருந்தால் கருணா பி;ள்ளையான் தலைமையில் முள்ளி வாய்க்காலில் உங்கள் கொலைகாரத் தலைமைக் கூட்டத்தை காப்பாற்றி இருப்பார்கள். கிழக்கில் அடைக்கலம் கொடுத்து இருப்பார்கள் பாவம் அரசியல் அறம் தவறியதால் அழிந்து போனவர்கள் நீங்கள். எங்களின் அனுதாபங்கள்.
எங்களுக்கென்றொரு தலைமையை நாங்கள் உருவாக்கியிருக்கின்றோம். எதிர்காலத்தில் அதனைப் பலப்படுத்தி எங்கள் மண்ணை அபிவிருத்தி செய்யப்போகின்றோம். ஏங்கள் பாதையில் எங்களை விடுங்கள். தமிழ் தமிழ் என்று ஏமாற்றி எங்களுக்காக முடிவுகளை நீங்கள் எடுத்த காலம் மலையேறி விட்டது. மேலாதிக்கமும் குள்ளத்தனமும்இ அரசியல் நேர்மையின்மையும் அதிகார வெறியும் இருக்கும் வரை உங்களுக்கு விடிவே இல்லை வேண்டுமானால் முள்ளவாய்க்கால்தான் மிச்சம்.


கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ் மகன் ஒருவர் எமது
மின் அஞ்சலுற்கு அனுப்பி வைக்கபட்டது

No comments:

Post a Comment