கடந்த ஜனவாரி 19ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்த ஜக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகமும், அவசர நிவாரண பிரதி ஒருங்கிணைப்பாளருமான கெதரின் பிரேக் வடக்கில் மற்றும் கிழக்கில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை நேரில் சென்று பார்வையிட்டார்.
இலங்கை அரசாங்கம் இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் மேற்கொள்ளும் பணிகளையிட்டு பாராட்டு தெரிவித்ததோடு, இந் நடவடிக்கைகளில் சிறந்த முன்னேற்றம் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
வடக்கின் உட்கட்டமைப்பு நடவடிக்கைககளுக்கென அரசு பாரிய அளவு தொகையை முதலிட்டுள்ள அதேவேளை, உதவி நிறுவனங்கள் இடம்பெயர்ந்த மக்களின் பௌதீக, சமூக மற்றும் உளவியல் தேவைகளுக்கு உதவத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment