Tuesday, February 2, 2010

ஜனாதிபதியின் இரண்டாம் பதவிக்காலம் 2010 நவம்பா; 19 ஆம் திகதி ஆரம்பம் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு.....

இலங்கையின் ஜனாதிபதியாக இரண்டாவது முறையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளதால் அவரது இரண்டாவது பதவிக்காலம் இவ்வருடம் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என உச்ச நீதி மன்றம் இன்று அறிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 129 ஆவது விதந்துரையின் கீழ் அவரது இரண்டாவது பதவிக்காலம் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைக் கேட்டிருந்தார்.
அரசியலமைப்பின் விதிகளின்படி உச்ச நீதி மன்றத்தின் கருத்து 24 மணித்தியாலங்களுக்குள் ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்த வேண்டும். இதன் அடிப்படையிலேயே உச்ச நீதி மன்றம் தனது தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது. அவரது இரண்டாவது பதவிக்காலம் இவ்வருடம் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி முதல் தொடர்ந்து ஆறு வருடங்கள் வரை என அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது பதவிக் காலம் தொடர்பில் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும் உச்ச நீதி மன்றக் குழுவில் பிரதம நீதியரசர் அசோக் டி சில்வா நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க நீதியரசர் ஜகத் பாலபட்டபெந்தி நீதியரசர் கே. சிறிபவன் நீதியரசர் பீ.ஏ. ஏக்கநாயக்க நீதியரசர் சந்திரா ஏக்கநாயக்க மற்றும் நீதியரசர் எஸ்.ஐ. இமாம் ஆகியோர் இடம்பெற்றனர்.

No comments:

Post a Comment