Monday, February 8, 2010

இலங்கைக்கு ரஷ்யா 300 மில்லியன் டொலர் கடனுதவி இன்று ஒப்பந்தம் கைச்சாத்து......

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ரஷ்ய விஜயம் காரணமாக ரஷ்யா 300 மில்லியன் டொலரை இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வழங்க இணங்கியுள்ளது. அதற்கான ஒப்பந்தம் இன்று மொஸ்கோவில் கைச்சாத்திடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்ட பிறகு மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வமான முதல் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார்.
நேற்று ரஷ்ய ஜனாதிபதியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த உதவி தவிர மேலும் பல உதவிகளை இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு வழங்க ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment