Wednesday, February 17, 2010

வேட்பு மனுக்களை ஏற்பதற்கான பணிகள் பூர்த்தி இடம்பெயர்ந்தோர் வாக்களிப்பதற்கான விண்ணப்பத் திகதி 26 வரை நீடிப்பு.....

பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கும் பணிகள் நாளை மறுதினம் (19) ஆரம்பமாக உள்ளதோடு, வேட்பு மனுக்களை கையேற்பதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு ள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிரி தெரிவித்தார்.
வேட்பு மனுத்தாக்கல் மற்றும் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தலைமையில் நேற்று (16) உயர்மட்டக் கூட்டமொன்று தேர்தல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன் போது தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாகவும், வேட்பு மனுத்தாக்கலின் போது முன்னெடுக்கப்பட வேண்டிய ஒழுங்குகள் குறித்தும் ஆராயப்பட்டதாக சுமணசிரி தெரிவித்தார். சகல தெரிவத்தாட்சி அதிகாரிகள், மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்கள், சிரேஷ்ட தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்குபற்றினர்.
இதேவேளை, இடம்பெயர்ந்த வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த காலக்கெடுவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நீடிக்க தேர்தல் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்காக விண்ணப்பிக்க இன்று வரையே (17) கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த கால அவகாசம் போதுமானதாக இல்லாததால் 26 ஆம் திகதி வரை அதனை நீடிப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
இதன்படி இடம்பெயர்ந்த வாக்காளர்களுக்கு வேறொரு வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க வசதி அளிக்கப்பட உள்ளது. இடம்பெயர்ந்தோர் தாம் வதியும் பிரதேசத்தின் கிராம அலுவலரின் அத்தாட்சியுடன் தேர்தல் திணைக்களத்துக்கு விண்ணப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
இடம்பெயர்ந்த வாக்காளர்கள் உள்ள பிரதேசங்களில் 2008 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் திணைக்களம் கூறியது.
இதேவேளை, வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் வேட்பாளர் பட்டியல்களை தயாரிப்பதில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடு பட்டுள்ளன. ஐ.ம.சு. முன்னணி 17 மாவட்டங்களுக்கான வேட்பாளர் பட்டி யல்களை பூர்த்தி செய்துள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான பட்டியல்களை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, இந்த வார இறுதிக்குள் அந்தப் பணிகள் நிறைவு செய்யப்பட உள்ள தாக கட்சி முக்கியஸ்தர் ஒருவர் கூறினார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எவ் வாறு போட்டியிடுவது என்பது தொடர்பாக ரி.எம்.வி.பி., ஈ.பி.டி.பி. போன்ற கட்சி களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் இணைந்து போட்டியிட்ட எதிர்க் கட்சிகளிடையே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்படுவதாக அறிய வருகிறது. ஐ.தே. முன்னணி யானைச் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ள தோடு, சரத் பொன்சேகா தலைமையில் கூட்டணி அமைத்துப் போட்டியிட ஜே.வி.பி. முயன்று வருகிறது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்துப் போட்டியிட தயாராகி வருவதோடு, மனோகணேசன் தலைமையிலான கட்சியும் ரவூப்ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ¤ம் தேர்தலில் இணைந்து, தனித்து போட்டி யிடுவது என்பது தொடர்பில் தொடர்ந்தும் பேசி வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் எம்.பி.க்கள் சிலருக்கு இம்முறை தேர்த லில் போட்டியிட அனுமதி கிடைக்காது எனவும், இவர்கள் வேறு கட்சிகளில் இணைந்து போட்டியிட தயாராவதாகவும் அறிய வருகிறது.
இதேநேரம் ஐ.ம.சு. முன்னணி திங் கட்கிழமை முதல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளதோடு, வேட்பு மனுத்தாக்கல் 26 ஆம் திகதி நண்பகலுடன நிறைவடைய உள்ளது. ஏப்ரல் 8 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படவுள்ளது.

No comments:

Post a Comment