Monday, February 8, 2010

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பணிப்பாளராக அனுஷ பல்பிட்ட பதவியேற்பு ...........

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளராக நியமனம் பெற்றுள்ள அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷ பல்பிட இன்று தனது பணிகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பான நிகழ்வு கொழும்பிலுள்ள தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்த ஆணைக்குழுவில் இன்று இடம்பெற்றதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கணக்கியல் துறையில் முதுமானிப்பட்டம் பெற்றுள்ள அனுஷ பல்பிட்ட இலங்கை நிர்வாக சேவையில் நீண்ட அனுபவம் பெற்றுள்ளவர் என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளராக பதிவியெற்றுள்ள அனுஷ பல்பிட்ட தொடர்ந்தும் அரச தகவல் திணைக்களத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment