Thursday, February 25, 2010

ஊர்வலத்துக்கு பதில் பாற்சோறு வழங்கல், இரத்த தானம், சிரமதானம் புதிய அரசியல் கலாசாரம் அம்பாந்தோட்டையில் ஆரம்பம்......

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுவை நாளை (26.02.09) தாக்கல் செய்யும் அதேவேளை அம்பாந்தோட்டையில் புதிய அரசியல் கலாசாரமொன்றை ஆரம்பிக்கப் போவதாக அம்பாந்தோட்டை மாவட்டத்துக்கான ஐ. ம. சு. மு. வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அன்றைய தினம் அம் பாந்தோட்டையில் ஊர்வலம் எதுவும் இடம்பெறாது.
அதற்கு பதிலாக விசேட முன்னுதாரண வேலைத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக வீரக்கெட்டிய நீலப் படையணி அலுவலகத்திலிருந்து அவர் குறிப்பிட்டார்.
அன்றைய தினம் பாற்சோறு வழங்குதல், இரத்த தானம் செய்தல் ஆகிய செயற்பாடுகள் இடம்பெறும். அத்துடன் மாவட்டம் முழுவதும் சிரமதான திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் மாவட்டம் முழுவதும் விகாரைகளில் மத வழிபாடுகள் இடம்பெறும் என்று அவர் மேலும் கூறினார்.
அம்பாந்தோட்டையில் இருந்து நாட்டுக்கு அரச தலைவரொருவரை அறிமுகப்படுத்தியுள்ளோம். அதேபோல் நாம் நாட்டுக்கும் உலகத்துக்கும் புதிய அரசியல் தரிசனத்தையும், அரசியல் கலாசாரத்தையும் அறிமுகப்படுத்துவோம் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment