Friday, February 12, 2010

வடக்கு கிழக்கில் சுயதொழிலை ஊக்குவிக்க புதிய கிளைகள்....

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் சுயதொழிலை ஊக்குவிக்க புதிய கிளைகளைத் திறப்பதற்கு இலங்கை வங்கி நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இலங்கை வங்கியின் எதிர்காலத் திட்டங்கள், இலக்குகள் குறித்து விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்; மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு 5 பில்லியன் ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. ஐம்பதினாயிரம் முதல் இரண்டரை மில்லியன் வரை கடன் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள்
விவசாயிகள் உள்ளிட்ட தொழிற்துறையினருக்கு அவர்களின் தொழில் முயற்சியை மேம்படுத்த கடன் வழங்கப்பட்டுள்ளது.
கிளி நொச்சி, மல்லாகம், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் ஏற்கனவே இயங்கிய கிளைகளை மீளத் திறப்பதுடன் புதிய கிளைகளையும் ஆரம்பிக்கவுள்ளோம். தற்போது வடக்கில் 30 கிளைகளும் கிழக்கில் 34 கிளைகளும் உள்ளன.
மேலும் 30 கிளைகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இலங்கை வங்கி கடந்த 60 ஆண்டு காலமாக யாழ்ப்பாணத்தில் இயங்கி வருகிறது.

No comments:

Post a Comment