Thursday, February 11, 2010

ஜனாதிபதியின் ரஷ்யா பயனத்தால் பல நன்மைகள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தகவல்......

ஜனாதிபதி ஜஹிந்த ராஜபக்ஷவுக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடலால் நாட்டுக்கு நன்மை பயக்கும் பல திட்டங்களுக்கான உதவிகளைப் புரிய ரஷ்யா முன்வந்துள்ளதாக அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அரச தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு பொதுவாக குறுகிய ஒரு நேரத்துக்கே இடம்பெறுவதுண்டு. எனினும் இலங்கை ரஷ்ய ஜனாதிபதிகளுக்கிடையிலான சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றது.
இதன்போது பல முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் அவற்றுக்கு ரஷ்யா சார்பில் திருப்திகரமான வரவேற்பும் கவனமும் அளிக்கப்பட்டது.
அதன் பிரதிபளிப்பு நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய பங்களிப்பு வழங்குவதாக விளங்குகின்றது. இலங்கையின் கணிமவள ஆராய்ச்சிக்கு உதவ அந்நாடு முன்வந்துள்ளது.
இலங்கை தேயிலை மிகக் கூடுதலான தொகையாக வருடத்துக்கு 42 மில்லியன் கிலோ ரஷ்யாவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதற்கு 20 வீதம் தீர்வை வரி அறவிடப்படுகிறது. அதற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை விடப்பட்டது. அது குறித்து கவனம் செலுத்த ரஷ்யா தரப்பினால் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
300 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டதுடன் ஊடகப்பரிமாற்றுத் திட்டம் ஒன்றுக்கான உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment