Wednesday, February 10, 2010

புனர்வாழ்வளிக்கப்பட்ட 273 புலிப்படையணிச் சிறுவர்களை பெற்றௌரிடம் கையளிக்க ஏற்பாடு.....

புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகளின் அனைத்து முன்னாள் சிறுவர் படையணியினரையும் பெற்றோரிடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இம்மாதயிறுதியளவில் அவர்களில் 273 பேரை பெற்றோர்களிடமோ பாதுகாவலர்களிடமோ ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அதிகார சபையின் தலைவர் ஜகத் வெல்லவத்த தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான நடவடிக்கைகள் இடம்பெற்ற போது 514 சிறுவர் படையணியினர் புனர்வாழ்விற்காக ஒப்படைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். அதேவேளை 120 சிறார்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு பெற்றோரிடம் ஏற்கெனவே ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜகத் வெல்லவத்த தெரிவித்தார்.
இதனடிப்படையில் தற்போது கல்வி போதிக்கப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு வருபவர்களுள் 273 பேரை பொற்றோர் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு மாத்திரமே அவர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகள் வழங்கப்படும் நிலையில் மே மாதமளவில் ஏனையோரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்தநிலையில் பெற்றோராலோ பாதுகாவலர்களாலோ பொறுப்பேற்கப்படாதவர்களுக்கான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ஜகத் வெல்லவத்த தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment