Thursday, February 18, 2010

சீனா, ரஷ்யா, கொரியா நாடுகளில் நில நடுக்கம் பாதிப்பு எதுவுமில்லை.......

சீனாவில் உள்ள யாஞ்சி என்ற இடத்தில் இன்று அதிகாலை நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரஷ்யாவின் எல்லையில் உள்ள பகுதியாகும். இதனால் ரஷ்யாவின் விலாடி போஸ் விக், வட கொரியாவில் உள்ள காவ்ஜின் ஆகிய இடங்களிலும் நில நடுக்கம் ஏற்பட்டது.
ஆனால் 3 நாடுகளிலுமே சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை. சீனாவில் நில நடுக்கம் ஏற்பட்ட பகுதி மக்கள், நாங்கள் நில நடுக்கம் எதையும் உணர வில்லை என்றே தெரிவித்தனர்.
நில நடுக்கம் ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 6.7 புள்ளியாக பதிவாகி இருந்தது. பூமிக்கு கீழே 98 கிலோ மீட்டர் ஆழத்தில் நில நடுக்க மையம் இருந்தது.
அதிக ஆழத்தில் நில நடுக்க மையம் இருந்ததால் நில நடுக்கம் அதிக சக்தி கொண்டதாக இருந்தாலும் பாதிப்பு இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர். சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
நியூசிலாந்து நாட்டுக்கு சொந்தமான கெர்மேடக் தீவிலும் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 5.8 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. இதிலும் சேதம் ஏதும் இல்லை.

No comments:

Post a Comment