Saturday, February 6, 2010

யாழ். கோட்டையைப் புனரமைக்க நெதர்லாந்து நிதி உதவி.....

யாழ்ப்பாணக் கோட்டையை புனரமைக்க நெதர்லாந்து அரசாங்கம், 61.1 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனைத் தவிர மேலதிக நிதியான 42.4 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கீடு செய்யும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் தகவலை அமைச்சரவைப் பேச்சாளர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். இதன்படி முதலாவது வேலைத்திட்டம், 2009 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2012 ஆம் டிசம்பர் வரையிலுமான காலப்பகுதியில் மேற்கொள்ளப்படும். அதேவேளை, நெதர்லாந்து அரசாங்கம் மேலும் பல்வேறு திட்டங்களுக்காக இலங்கைக்கு நிதியுதவியை வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதில் திருகோணமலையில் உள்ள பழைய டச்சுக் கடற்படை ஆணையாளர் வீடும் உள்ளடங்கவுள்ளது. இதற்காக நெதர்லாந்து அரசாங்கம் 75 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment