Wednesday, February 3, 2010

பொதுத் தேர்தலின் பின்னரே ஓய்வூபெறுவது குறித்து முடிவு தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு...

எதிர்வரும் பொதுத் தேர்தலையும் நடத்தி முடித்த பின்னரே தாம் பதவி விலகுவது குறித்து முடிவு எடுப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தயானந்த திஸாநாயக்கா தெரிவித்தார்.
ஜனாதபதித் தேர்தலின் பின்னர் பதவி விலகுவதாக தாம் முன்னர் அறிவித்திருந்த போதிலும் அதில் மாற்றம் கொண்டு வர நேர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இநதத் தகவல்களை வெயளியிட்டார்.
தமது முடிவின் மாற்றம் குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் பல காரணங்களை முன்னிட்டு பதவி விலகுவது குறித்து முன்னர் நான் அறிவித்த முடிவில் மாற்றம் கொண்டுவர நேரிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை என்னைச் சந்தித்த சிரேஷ்ட தேர்தல் அதிகாரிகள் பொதுத் தேர்தல் நெருங்கி வருவதால் தங்களை கைவிட்டுச்செல்லாமல் அந்தத் தேர்தலையும் நடத்திவிட்டுச் செல்லுமாறு வேண்டுகொள் விடுத்தார்கள். நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் அவற்றை எதிர்கொள்ளவும் வேணடும். எனது சட்ட ஆலோசகர்களுடன் இந்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்ய கால அவகாசம் தேவை. மற்றும் ஒரு முக்கியமன விடயம் என்னவென்றால் எதிரணி முக்கியஸ்தர்களும் என்னைச் சந்தித்து எதிர்வரும் பொதுத்தேர்தலையும் நடத்தி முடிக்குமாறு கெட்டுக்கொணடார்கள்.
இவ்வாறான வேண்டுகோள்களை கவனத்தில் கொண்டே எனது முடிவில் மாற்றம் கொண்டுவந்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்தார்

No comments:

Post a Comment