Saturday, October 30, 2010

யுத்த பாதிப்பு செங்கலடி மக்களுக்கு 11 லட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவி.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மீள் குடியமர்த்தப்பட்ட ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச மக்களுக்கு 11 இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது.
ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகப்பிரிவின் ஈரளக்குளம் கிராமசேவககர் பிரவில் இலுக்குப்பொத்தானை, முத்தன்குமாரவெளி, விளான்தோட்டம் ஆகிய கிராமங்களில் கரித்தாஸ் எகெட் நிறுவனத்தால் வீடுகள் வழங்க தெரிவு செய்யப்பட்ட 45 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கும் செயற்திட்டத்தில் முதலில் 31 குடும்பங்களுக்கான வாழ்வாதர உதவிகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வானது இன்று இலுக்குபொத்தானை கிராமத்தில் உத்தியோகபூர்வமாக இடம்பெற்றது.
இதில் நிறுவன இயக்குனர் அருட்பணி பேராசிரியர் த. ஸ்ரீதரன் சில்வெஸ்ரர் கால்நடைகளை (ஆடு,மாடு) கொள்வனவு செய்வதற்கான காசோலைகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது.
நிறுவக நிகழ்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.ஓ ஜெயானந்தன், நிதிமுகாமையாளர் பி. புண்ணியமூர்த்தி, மற்றும் உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டு ஏனையவர்களுக்கு வழங்கி வைத்தனர்.
ஒவ்வொரு பயனாளிகளுக்கும் ரூபா. 34,000.00 வீதம் மொத்தமாக பத்து இலட்சத்து அறுபத்து நான்கு ஆயிரம் ரூபா வழங்கி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment