Thursday, October 7, 2010

செங்கலடியில் 145 பேர் இன்று காலை மீள்குடியமர்வு.

மட்டக்களப்பு மாவட்டம், செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவின் ஈரழக்குளம் கிராம சேவகர் பிரிவிலுள்ள லாவன்யா மற்றும் குருக்கனாமடு ஆகிய கிராமங்களில் இருந்து கடந்த கால யுத்தத்தினால் இடம்பெயர்ந்தோர் இன்று மீளக்குடியமர்த்தப்பட்டனர்.
சித்தாண்டி பகுதியில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தங்கியிருந்த 36 குடும்பங்களைச் சேர்ந்த 145பேரே இவ்வாறு இன்று காலை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டனர்.
செங்கலடி பிரதேச செயலகத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்ட உதவித்திட்ட பணிப்பாளர் ஏ.எல்.எம்.சரிப் மற்றும் செங்கலடி உதவி பிரதேச செயலாளர் சித்திரவேல், ஜக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகள், எகெட் நிறுவன பிரதிநிதிகள், இராணுவ பொலிஸ் அதிகாரிகள் முன்னலையில் இவர்கள் அனுப்பப்பட்டனர்.
இரண்டு பஸ்களில் இவர்கள், அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு மீளக்குடியமர்த்தப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாகயம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment