Sunday, October 10, 2010

26.09.2010 அன்று சுவிஸ் சூரிஸ்ச் மானிலத்தில் உதயம் அமைப்பினர் நாடாத்திய கலைகலாச்சார விழாவில் இடம் பெற்ற நிகழ்வின் புகைப்படங்கள்.........

சுனாமி அனர்த்ததினால் பாதிக்க பட்ட மக்களின் வாழ்வை மேம்படுத்தி முன்னேற்ற வாழ்வில் அவர்களை அழைத்துச்செல்ல காலம் தாழ்த்தாது அன்று பொதுநலசிந்தனைகளை சுமந்து சென்றபொது நலவாதிகளால் ஆராம்பிக்கப்பட்டது உதயம் என்ற பொது நல்அமைப்பு. புலம்பெயர் மக்களின் ஆதரவோடு தமிழ்மக்களின் கரம்பற்றி வருடாவருடம் கலைநிகழ்வுகளை நடாத்துவது மக்கள் அறிந்த விடையமாகும் இதே போன்று இவ்வருடமும் உதயம் அமைப்பினர் சுவிஸில் ZÜRICH மானிலத்தில் 26.09.2010 அன்று 11.00 மணியளவில் ஆரம்பித்து இரவு 9.00 மணிவரை இடம்பெற்றது இப்பாரம்பரிய கலைகலாச்சார நிகழ்வு மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது பின்னர் உதயத்தின் தலைவர் அவர்கள் வரவேற்பு உரையுடனும் பின்னர் ரஞ்சன் கரோக்கி இசையில் பத்திப்பாடலுடன் நிகழ்சிகள் ஆரம்பிக்கப்பட்டது தொடர்ந்து நடனம். அதியுர் சிறந்த தம்பதியனர். சிறந்த பெற்றோர்களும் பிள்ளைகளும் என்றும் .இவ்வாறான சிறந்த நிகழ்வுகளையும் மக்கள் முன் அரங்கேற்றினர் அதன்பின்னர் மதிய உணவு வழங்கப்பட்டது தொடர்ந்து அதிஸ்டசாலியார்? என்ற அதிஸ்டலாபசீட்டும் உதயம் அமைப்பினரால் அதிஸ்டம் பார்க்கப்பட்டது முதலாம் பரிசுபிரான்ஸ் நாட்டைசேர்ந்த இலங்கைத்தமிழர் ஒருவருக்கும் மிகுதி 2ம 3ம் பிரிசுகள் சுவிஸ் நாட்டை சேர்ந்தவர்களும் பெற்றுக்கொண்டனர் பின்னர் உதயம் அமைப்பின் அங்கத்தினருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது இவ் காலாச்சார நிகழ்வை பொரும் தொகையான மக்கள் காணவந்திருந்ததை நாம் காணக்கூடியதாகவிருந்தது பெரும்பாலான மக்கள் நிகழ்வுகளில் அர்வத்துடன் கலந்து கொண்டனர் இவ்நிகழ்வுகளில் சிறுவர்களின் நடனங்கள் மிகவும் சிறப்பாக இருந்தது என உதயம் நிகழ்வை காண வந்த மக்கள் தெரிவித்திருந்தனர் பெரும்பாலான மக்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய முன்வந்திருந்தனர் இறுதியின் மீன்மகள் பாடுகிறாள் வாவிமகள் ஆடுகிறாள் என்ற பாடலுக்கு அனைவரும் நடனமாடி உதயம் விழாவினை நிறைவு செய்தனர் இவ்விழாவினை பக்கபலமாக நின்று ஓழுங்கமைத்து சிறப்பாக நடாத்த தங்கள் கரங்களை தந்து உதவியவர்களுக்கு உதயம் அமைப்பினர் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர்

No comments:

Post a Comment