Thursday, October 14, 2010

கடற்தொழில் அமைச்சு வழிகாட்டலில் மட்டக்களப்பில் 120 மீனவர் அமைப்புக்கள்.

கடற்தொழில் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்னவின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 120 மீனவர் அமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளர் டொமினிக் ஜோர்ஜ் இதனைத் தெரிவித்தார். இவற்றினூடாக எதிர்காலத்தில் மீனவர்களின் வாழ்க்கைத்தரம் கட்டியெழுப்பப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் இதுவரை இம்மாவட்டத்தில் 60 அமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் ஒருமாத காலத்தில் ஏனைய 60 அமைப்புக்களின் பணிகளும் நிறைவடைந்து விடுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
120 அமைப்புக்களையும் உள்ளடக்கி மாவட்ட மட்டத்தில் ஒரு அமைப்பும், இவை அனைத்தையும் இணைந்து தேசிய ரீதியிலான சம்மேளனம் ஒன்றையும் ஏற்படுத்தவுள்ளனர்.
தேசிய சம்மேளனத்தின் முதலாவது தேசிய மாநாடு கடற்றொழில் அமைச்சரின் தலைமையில் இவ்வருட இறுதியில் கொழும்பில் நடைபெறவுள்ளதாகவும் உதவி பணிப்பாளர் தெரிவித்தார்.
கடற்தொழில் திணைக்கள பணிப்பாளர்நாயகம் எஸ்.டபிள்யூ. பத்திரனவின் தலைமையிலேயே இந்த அமைப்புகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment