Tuesday, October 19, 2010

ஒரு மாணவனுக்கு மூன்று மொழிகளிலும் கல்வியை வழங்க வேண்டும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்க.

ஜனாதிபதி முன்வைத்துள்ள புதிய கல்வி கொள்கையில் உள்ளார்ந்த கருத்து சிறு வயதிலிருந்தே மூன்று மொழிகளையும் ஒரு மாணவனுக்கு வழங்க வேண்டும் என்பதாகும் என மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்க தெரிவித்தார்.
இன்று கண்டி வித்திலெவ்வை மகாவித்தியாலயத்தின் கணனி அறை, கணனித் தொகுதி என்பவற்றைத் திறந்த வைத்த பின் இடம்பெற்ற கூட்டத்திலே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ஏக்க நாயக்க, சிறு வயதிலிருந்தே மூன்று மொழிகளையும் ஒரு மாணவனுக்கு வழங்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் இன்று கல்வி மாற்றங்கள் ஏற்படுத்தப் பட்டு வருகின்றன.
இதனடிப்படையில் தற்போது நடைமுறையில் உள்ள ஆண் பாடசாலை, பெண்பாடசாலை, முஸ்லிம் பாடசாலை, தமிழ் பாடசாலை என்ற சகல பாகு பாடகளும் நீக்கப் பட்டு புதிதாக மூன்று வகைப் பாடசாலைகள் மட்டுமே ஏற்படுத்தப் படும்.
இதன்படி ஆரம்பப் பாடசாhலை, இடை நிலைப்பாடசாலை, உயர் பாடசாலை என்ற மூன்று பிரிவு மட்டுமே இருக்கும். அத்துடன் கணனிக் கல்வி முக்கியத்துவம் பெறும் . சகலமாணவர்களுக்கும் மடி கணனிகள் வழங்கப் படும். தேவையான அனைத்து வளங்களும் கணனியின் சேமிக்கப் பட்டடிருக்கும். இதன் காரணமாகவே இன்று கணனி அறிவிற்கு முக்கியத்துவம் வழங்கப் படுகிறது.
இதன்பிறகு இப்போதுள்ளது போன்ற ஆசிரியர் இடமாற்றப் பிரச்சினை மாணவர்கள் புத்தகம் சுமக்கும் பிரச்சினை, பாடத்திட்டம் மாற்றமடையும் போது அசிரியர்களுக்கு வழங்கவேண்டிய புத்தாக்க வகுப்புக்கள் போன்ற பல பிரச்சினைகள் குறைய இடமுண்டு என்றார்.
ஆரம்பப் பிரிவு முதலே சகல மாணவர்களுக்கும் மும்மொழிகளிலும் அடிப்படை அறிவு வழங்கவும் நடிவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment