Monday, October 25, 2010

வைத்தியசாலைகளில் 24 மணிநேரமும் வெளிநோயாளருக்கு சிகிச்சை ஜனாதிபதி உத்தரவு..

அரச வைத்திசாலைகள் அனைத்திலும் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு 24 மணி நேரமும் இயங்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறிப்பித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இதற்கான பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
வாரத்தின் ஏழு நாட்களும் வெளிநோயாளர் பிரிவுகளில் 24 மணி நேர சேவை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தி விரைவாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதியின் பணிப்புரை மற்றும் வழிகாட்டல்களுக்கமைய இத்திட்டத்தை செயற்படுத்துவதுடன் ஆரம்பத்தில் பிரதான வைத்தியசாலைகளில் நடைமுறைப்படுத்தவூம் அடுத்த கட்டமாக அதனை சகல வைத்தியசாலைகளுக்கும் விரிவுபடுத்த உத்தேசித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment