Tuesday, October 12, 2010

பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி!

புது டில்லியில் நாளை மறுதினம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறப்பு அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இந்தியா செல்லும் ஜனாதிபதி இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் இரு தரப்புப் பேச்சுவாத்தையில் ஈடுபடவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸஷம் செல்லவுள்ளார் இவர் இந்திய அமைச்சரவை உறுப்பினர்களுடன் இலங்கையின் முக்கிய விடயங்கள் குறித்து ஆராயவுள்ளார்.

No comments:

Post a Comment