Sunday, October 10, 2010

மலையகத்தில் அடை மழை கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தில் மக்கள் இடம்பெயர்வு...

மலையகப் பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழையால் கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தில் வாழ்ந்த சுமார் 14 குடும்பங்களைச் சேர்ந்த 69 பேரை அந்த வீடுகளை விட்டு வெளியேறுமாறு நுவரெலியா மாவட்டச் செயலாளர் டி.பி.ஜி.குமாரசிறி பணித்துள்ளார்.
மேற்படி நடவடிக்கை நேற்று முன்தினம் (08) மாலை 4 மணி அளவில் இடம் பெற்றுள்ளது. தொடர்ச்சியாக சில தினங்களாக பெய்து வரும் அடைமழையால் இத்தோட்டத்தில் உள்ள தொழிலாளர்களின் தொடர் குடியிருப்புகள் பாதிப்புக் குள்ளாகியுள்ளன. ஒரு சில வீடுகளில் சுவர்கள் இடிந்து வீழ்ந்துள்ளன.
இங்கு வாழும் மக்களின் பாதுகாப்பு கருதியே இந்நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment