Sunday, October 17, 2010

புதிய அரசியல் கட்சிகளின் பதிவுக்கான நடவடிக்கை நவம்பர் முதல் வாரத்தில் தேர்தல்கள் திணைக்களம்.

அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கென விண்ணப்பித்துள்ள கட்சிகளின் அடிப்படைத் தகைமைகள் தொடர்பில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஆராயப்படவுள்ளதாகத் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பித்துள்ள கட்சிகளின் முக்கியஸ்தர்கள் இதன்போது நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது. அரசி யல் கட்சியாகப் பதிவு செய்வதற்கு தற்போது எண்பதற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. என்றும் தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment