Thursday, October 28, 2010

வெள்ளத்தினால் உயிரிழந்தோர் 68 ஆக அதிகரிப்பு தாய்லாந்தில்.

தாய்லாந்து வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் தொகை 68 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இம்மாத ஆரம்பத்தில் பெய்யத் தொடங்கிய கடும் மழையினாலேயே பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.
மழை சிலநாட்களில் மேலும் அதிகரிக்குமென தாய். வானிலை அவதான மையம் எச்சரித்துள்ளது.
சுமார் 800 பேர்வரை வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 1.6 மில்லியன் ஏக்கர் விளை நிலங்கள் வெள்ளத்தால் பெருஞ்சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளம் காரணமாக தாய்லாந்தின் பொருளாதார நிலையில், சுமார் 674 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டமேற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment