Tuesday, October 12, 2010

மட்டக்களப்பில் நாளை சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கை..

மட்டக்களப்பு மாவட்டதில் நாளை 13ஆம் திகதி புதன்கிழமை சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்திற்கென சுனாமி தாக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திருச்செந்தூர் மற்றும் டச்பார் கிராம சேவகர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நிலையத்தின் மாவட்ட பதில் இணைப்பாளர் ஏ.எம்.எம்.கசீர் தெரிவித்தார்.
நாளை மாலை 3.00 மணிக்கு குறித்த இடங்களை மையப்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தின் வழிகாட்டலில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment