Tuesday, December 8, 2009
ஈராக் தலைநகர் பக்தாத்தில் இன்று காலை இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பியில் 101 பேர் பலி
ஈராக் தலைநகர் பக்தாத்தில் இன்று காலை இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களில் 101 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 182 காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.பக்தாத்தின் தென்பகுதி மாவட்டமான டோராவில் இன்று காலை 10 மணியளவில் முதலாவது குண்டு வெடித்தது.ஏனைய மூன்று கார் குண்டுகளும் பக்தாத்தின் மத்திய நகரப்பகுதியில் 10.30 மணியளவில் வெடித்தன.இவற்றுள் ஒன்று சமூக மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சின் முனபாகவும், ஏனையவை வர்த்தக நகரங்களான நாடா மற்றும் அல்-கஷ்லா சதுக்கம் போன்றவற்றில் வெடித்துள்ளன.ஐந்தாவது குண்டு பக்தாத்தின் மேற்கு மாவட்டமான மன்சூரிலுள்ள கார்க் சிவில் கோட்டிலும் வெடித்துள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment