Monday, December 28, 2009

கிழக்கு மக்களின் வாக்குகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷகே கிடைக்கும் என்று அமைச்சர் கருணா அம்மான் தெரிவித்தார்.

நாட்டுக்கு பெரும் சேவை செய்துள்ள ஆளுமை மிக்கத் தலைவர் ஒருவர் இருக்கும்பொது வேறு ஒரு தலைவர் நாட்டுக்குத் தேவையில்லை என தேசிய நல்லிணக்க மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் வினாயமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) இன்று தெரிவித்தார்.
கொழும்பு மாகாவலி கேந்திர நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு அமைச்சர் கருணா அம்மான் மேலும் கூறியதாவது
கடந்த நான்கு வருட காலத்தில் கிழக்கில் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டன.
இதன் காரணமாக கிழக்கில் வாழும் தமிழ் சிங்கள முஸ்லிம் ஆகிய மூவினத்தவர்களும் பெரும் நன்மையடைந்துள்ளனர். எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கு மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே வாக்களிக்கத் தீர்மானித்துள்ளனர்.
எதிர்க் கட்சியினர் போலியான ஒரு அரசியலையே முன்வைக்கின்றனர். அவர்களிடம் மக்களுக்கு நன்மை தரக்கூடிய திட்டங்கள் இல்லை. இதனை நாட்டு மக்கள் நன்கறிவர். கிழக்கு மக்களின் வாக்குகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷகே கிடைக்கும் என்றும் அமைச்சர் கருணா அம்மான் கூறினார்

No comments:

Post a Comment