Monday, December 14, 2009

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்வு - இனியபாரதி மேற்கொண்ட முயற்சியின் பலன்

இரு தசாப்தங்களாக கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் பல சுயநல அரசியல்வாதிகளின் தலையீடுகளால் தடைப்பட்டுவந்துள்ள இந்நிலையில், கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தற்போது தனியான பிரதேச செயலகமாக செயற்படுவதற்கான அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான வர்த்தமான பத்திரிகை அறிவித்தல் வெளியாகவுள்ளதாகவும் தெரியவருகிறது.இத்தரமுயர்த்தலுக்காக ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி மேற்கொண்ட முயற்சியின் பலனாக இதற்கான அனுமதியினை ஜனாதிபதி வழங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.இம்மகிழ்ச்சியான செய்தி கேட்டு கல்முனை பிரதேச தமிழ்ப்பிரிவு மக்கள் மகிழ்ச்சி ஆராவாரம் செய்தும் பட்டாசுகள் கொழுத்தியும் தமது மகிழ்ச்சியைத் வெளிப்படுத்தும் அதவேளை, இதற்கான பாடுபட்ட ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளார் இனியபாரதிக்கு தமது நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.இது தொடர்பாக கல்முனை பிரதேச புத்தியீவிகள் தமது மகிழ்ச்சியையும் நன்றிகளையும் இனியபாரதிக்குத் தெரிவித்துக் கொள்வதாகத் தெரியவருகிறது.

No comments:

Post a Comment