Wednesday, December 2, 2009

கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு கௌரவ அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விஜயம்.

கிழக்கு மாகாணத்தின் அதி சிறந்த கல்விக்கூடமாக திகழும் வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழத்திற்கு தேசிய நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விஜயத்தினை மேற்கொண்டார் அங்கு பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தினை முதலில் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார் பின்பு அப் பல்கலைக்கழகத்தின் துனைவேந்தர் பத்மநாதன் மற்றும் பீடாதிபதிகள், பதிவாளர், சபை உறுப்பினர்களை சந்தித்து பல்கலைக்கழத்தில் இடம்பெறும் அபிவிருத்திகள் தொடர்பாகவும், அண்மையில் மாணவர்களால் நடத்தப்பட்ட பதிவாளர் மாற்றம் தொடர்பான பகிஸ்கரிப்பு மற்றும் ஏனைய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பிடும்போது எமது பல்கலைக்கழகம் பின்செல்கின்ற நிலை தொடர்பாகவும், மாணவர்கள் மனங்களில் நாம் முதலில் இடம்பிடித்து அவர்களுடைய குறைபாடுகளை நிவர்த்தி செய்து ஒற்றுமைப்படுத்த வேண்டிய தார்மீக பொறுப்பில் இந்த உயர் அதிகாரிகள் இருக்கின்றீர்கள் என்றும், வெளிநாட்டில் தங்கள் உயிர்களை காப்பாற்ற சென்ற புத்திஜீவிகள் விசேடமாக கூறப்போனால் எமது பல்கலைகத்தில் இருந்து வெளிநாடு சென்ற இவர்கள் மீண்டும் இங்கு அனுமதி வழங்கி அவர்களை உள்வாங்க வேண்டும் என்றும், எதிர்வரும் 5ம் திகதி பதிவாளருக்கான காலவகாசம் நிறைவுறும் வேளையில் புதிய பதிவாளரை நியமணம் செய்ய வேண்டும் எனவும், ஏனைய பல அபிவிருத்தி தொடர்பாகவும், சிறப்பாகக் கூறப்போனால் எமது மருத்துவ பீடத்தினை நவீன முறையில் கட்டியெழுப்பக் கூடியவகையில் ஒரு நிறுவனத்திடம் உதவி கோரியுள்ளேன். அது விரைவில் கிடைக்கும் என்றும் எமது ஒற்றுமையில்தான் எம்மினத்தின் சிறந்த அபிவிருத்தியும், பலமும் தங்கியுள்ளது என்று குறிப்பிட்டார். அத்தோடு எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில். எமது இனத்தினை மதித்து எமக்கு இலங்கைத் திருநாட்டில் சிறந்த கௌரவத்தினை வழங்கியுள்ள அதி உத்தம ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை நாங்கள் மீண்டும் அதே ஜனாதிபதியின் கதிரையில் அவரை அமர்த்தி நாம் அனைவரும் ஒன்றுபட்டு வாக்களிப்பதன் மூலம் அவரை நாம் பலமாக்கி பயன்படுத்துவோம் எனவும் குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment