சுமைகளை சுமந்த மக்களை
சோகத்தில் ஆழ்த்திச்சென்ற
சுனாமியே.....உனை
சுட்டித்தனமாக நினைத்த எங்களை
சுறுட்டிவாரி சென்றதேனோ?
அன்பதை பரிமாறி அவனியில்
அகம்மகிழ்ந்து கொண்டாடும் உறவுகளிடம்
ஆழ்ந்த சோகத்தை தந்து விட்டு
அமைதியாக நகர்ந்து சென்றதேனோ??
தன்மானத்தை சுமந்த எங்கள் இனத்தை
தத்தளிக்க வைத்துவிட்டு
தற்புகழ்ச்சி சுனாமியெனும் நாமம் சுமந்து
தரைதனில் தவழ்ந்து சென்றதேனோ??
திரும்பிய திசைகள் எல்லாம்
திகைத்து நின்ற அப்பாவிகளுக்கு தீய
திருப்புமுனை களமாக அன்று
திராவகத்தை தெளித்ததேனோ??
ஈன்றவரை தொலைத்த தனையன்களுக்கு
ஈட்டி நெஞ்சில் துளைத்தது போல்
ஈனத்தனமான செயலை செய்தவன் நீ
ஈடுசெய்ய முடியுமா இப்பிறப்பில்
ஈசனிடம் கேட்டு மண்றாடி கேட்கிறோம்
எனிமேலும் வேண்டாம்...எங்கள் உறவுகளை
அள்ளிச்செல்ல வேண்டாம்..............
அலைகடலில் சங்கமமான எங்கள் உறவுகளுக்காக..
கிழக்குமகள் இணையம்
சோகத்தில் ஆழ்த்திச்சென்ற
சுனாமியே.....உனை
சுட்டித்தனமாக நினைத்த எங்களை
சுறுட்டிவாரி சென்றதேனோ?
அன்பதை பரிமாறி அவனியில்
அகம்மகிழ்ந்து கொண்டாடும் உறவுகளிடம்
ஆழ்ந்த சோகத்தை தந்து விட்டு
அமைதியாக நகர்ந்து சென்றதேனோ??
தன்மானத்தை சுமந்த எங்கள் இனத்தை
தத்தளிக்க வைத்துவிட்டு
தற்புகழ்ச்சி சுனாமியெனும் நாமம் சுமந்து
தரைதனில் தவழ்ந்து சென்றதேனோ??
திரும்பிய திசைகள் எல்லாம்
திகைத்து நின்ற அப்பாவிகளுக்கு தீய
திருப்புமுனை களமாக அன்று
திராவகத்தை தெளித்ததேனோ??
ஈன்றவரை தொலைத்த தனையன்களுக்கு
ஈட்டி நெஞ்சில் துளைத்தது போல்
ஈனத்தனமான செயலை செய்தவன் நீ
ஈடுசெய்ய முடியுமா இப்பிறப்பில்
ஈசனிடம் கேட்டு மண்றாடி கேட்கிறோம்
எனிமேலும் வேண்டாம்...எங்கள் உறவுகளை
அள்ளிச்செல்ல வேண்டாம்..............
அலைகடலில் சங்கமமான எங்கள் உறவுகளுக்காக..
கிழக்குமகள் இணையம்
No comments:
Post a Comment